Dreamz - கனவுகள்
நான் கவிஞனும் அல்ல !! நான் படைப்பது கவிதையும் அல்ல !! என் மனதில் தோன்றும் உணர்வுகளை வார்த்தை வடிவில் சேகரித்து கொள்கிறேன், என்றோ ஒரு நாள் இதை படிக்கையில் கிடைக்கபோகும் ஆனந்தத்தை எதிர்பார்த்து. உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன், ஏதேனும் குறைகள் இருந்தால் தெளிவுபடுத்துங்கள் நிறைகள் ஆக்கிக்கொள்கிறேன்...!! :-) :-) வார்த்தைகள் ஆயிரம், அதில் அர்த்தங்கள் கோடி..!! என் கனவு துளிகளை காவியமாய் பதிவிடுகிறேன்..!!! :-) என்றும் உங்கள் அன்பில்..! :-)
Monday, February 20, 2017
Sunday, February 12, 2017
கனவு #15 - சொர்கம் எங்கே ??!!
நல்ல பையனா இருடா, அப்ப தான் கடவுள் உன்ன சொர்க்கதில் சேர்த்துபாரு...,
என்று என் நண்பன் சொல்ல..!!
என்று என் நண்பன் சொல்ல..!!
சொர்க்கதில் என்ன கிடைக்கும் என்று கேட்டேன்..!!
பசி தீர்க்க அமிர்தம் கிடைக்கும்,
ஓடி விளையாட தேவதைகள்,
அன்பு பரிமாற ரிஷிகள்,
என்னை ஆனந்தமாய் பார்த்துக்கொள்ள தேவிகள்,
நான் கேட்பதை கொடுக்க கடவுள்...!!!
என்று கூறி என்னை ஒரு பார்வை பார்த்தான்..!!!!
பசி தீர்க்க அமிர்தம் கிடைக்கும்,
ஓடி விளையாட தேவதைகள்,
அன்பு பரிமாற ரிஷிகள்,
என்னை ஆனந்தமாய் பார்த்துக்கொள்ள தேவிகள்,
நான் கேட்பதை கொடுக்க கடவுள்...!!!
என்று கூறி என்னை ஒரு பார்வை பார்த்தான்..!!!!
இதை கேட்டதும் எனக்கு ஆனந்தம்,
அவனிடம் சிரித்து கொண்டே சொன்னேன்...!!!
அவனிடம் சிரித்து கொண்டே சொன்னேன்...!!!
நீ கூறிய வார்த்தைகள் உண்மையானால்,
இப்போதும் நீ சொர்க்கத்தில் தானே இருக்கிறாய்..!!!
இப்போதும் நீ சொர்க்கத்தில் தானே இருக்கிறாய்..!!!
தாய் உனக்கு ஊட்டிய பாலை விட அமிர்தம் பெரிதல்ல...!!!
நீ சோர்ந்தாலும், உன்னை தட்டி எழுப்பி உன்னுடன் விளையாட உன் தமையன், தங்கை இருக்கையில் தேவதைகள் எதற்கு...??
அன்பு பரிமாற அன்பர்களாய் நண்பர்கள் இருக்கையில் ரிஷிகள் எதற்கு...???
அவள் ஆனந்தம் பாராது, உன் ஆனந்தம் வேண்டி கண்ணீர் சிந்தும் தாய் இருக்கையில், தேவிகள் எதற்கு..???
கேட்கும் முன் இது தான் உன் தேவை என புரிந்து கொள்ளும் தந்தை இருக்கையில், கடவுள் எதற்கு...??
நீ சோர்ந்தாலும், உன்னை தட்டி எழுப்பி உன்னுடன் விளையாட உன் தமையன், தங்கை இருக்கையில் தேவதைகள் எதற்கு...??
அன்பு பரிமாற அன்பர்களாய் நண்பர்கள் இருக்கையில் ரிஷிகள் எதற்கு...???
அவள் ஆனந்தம் பாராது, உன் ஆனந்தம் வேண்டி கண்ணீர் சிந்தும் தாய் இருக்கையில், தேவிகள் எதற்கு..???
கேட்கும் முன் இது தான் உன் தேவை என புரிந்து கொள்ளும் தந்தை இருக்கையில், கடவுள் எதற்கு...??
கடவுள் அமைத்த சொர்க்கத்தில் வாழ்கிறாய்...!!!
பொய்யாக ஒரு சொர்க்கத்தை உருவாக்கி உன் நொடிகளை வீனாக்கி விடாதே..!!!
பொய்யாக ஒரு சொர்க்கத்தை உருவாக்கி உன் நொடிகளை வீனாக்கி விடாதே..!!!
...... 💗💗💗💗💗
Tuesday, February 7, 2017
Monday, February 6, 2017
கனவு #13 - இதுவே மாற்றம்...!!!
இளைஞர் படை சூல, கோட்டைகள் நடு நடுங்க..!!
பணத்தை வெல்லும் படை தோன்றும்..!!
எத்தனையோ கருவி உண்டு அத்தனையும் மண்டி இடும்,
புது கருவி ஒன்றுருவாகும், அதுவே அருவியாய் ஓடும் இங்கே...!!
ஜாதி மதம் மறையும் இங்கே..!! மக்கள் எனும் புது உணர்வு பிறக்கும்..!!
வேற்றுமைகள் பல இருக்கும், அதில் ஒரு ஒற்றுமையாய் ஒன்று திகழும்..!!
வீதிக்கு நான் வரும் காலம் முடியும்...!! விதியோ அதை நடத்தி வைக்கும்...!!
தமிழ் என்ற ஓர் வார்த்தை, உலகமெங்கும் தலை தூக்கும்..!!
நிமிர்ந்து தானே நான் ரசிப்பேன் அந்நாளை..!!
தமிழன்
கனவு #12 - தமிழ் என் உயிர் !!
அமைதி காக்க வேண்டிய வெண்மை நிறம் இன்று அகங்காரம் கொள்கிறது, இவர்கள் வெண்மையை வேட்டி சட்டையாய் அணிந்த போது..!!
கர்வ கர்ஜனை எழுப்பும் தமிழ் இனம், இன்று கோமாளி கூச்சல் போடுகிறது இவர்கள் மேடையில் அரங்கேறியதால்..!!!
அம்மா என்ற சொல்லின் தமிழ் அர்த்தம் அழிந்தது, இந்த ஈன பிரிவுகளின் அம்மா போர்வையால்..!!
கேட்பார் இல்லை...!! கொடுப்பார் உண்டு..!! கெடுப்பாரும் உண்டு..!! இந்த நாடக மேடை, அதில் ஆடும் கூத்தாடிகள் நாம் வளர்த்த கோமாளிகள்...!!!
தமிழனாய் கண்ணீர் மட்டுமே சிந்த முடிகிறது..!! கண்ணீரையும் பையில் அடைத்து வியாபாரம் செய்யும் ஊடகங்களின் மத்தியில்..!!
எழுவேன் நிச்சயமாய்..!! தமிழனாய் உலகை ஆள்வேன்..!! சோதனைகள் ஆயிரம், அதில் வேதனைகள் பல கோடி, வீழமாட்டேன் !! வீழ்த்திடுவேன் !!
தமிழ் என் உயிர் !! தமிழர் என் மக்கள் !! தமிழ்நாடு என் தேசம் !!
Sunday, February 5, 2017
கனவு #11 - வீதிக்கு வா தமிழா..!! உன் நாட்டை மீட்டு எடு..!!
மாட்டின் மீது அக்கறை கொண்டாயே...!! நாட்டை தவிக்க விட்டு வேடிக்கை பார்க்கிறாயே....!!! எங்கே உன் தமிழ் உணர்வு ??!!
தமிழ் கலாச்சாரம் அழிந்துவிட கூடாது என்று வீதிக்கு வந்தாய்...!! இன்று தமிழே அழிகிறது !! எங்கு சென்றாய் ??
வெள்ளம் வந்தது ஓடோடி வந்தாய்..!! பேரிடர் வந்தது பெருகி வந்தாய் !! இனம் அழிந்தது, ஈடு கொடுக்காமல் காத்தெடுத்தாய்..!! இன்று உன் நாடே அழிகிறது, எப்போது வருவாய் ??
தமிழனென்று சொல்லடா தலை "நிமிர்ந்து" நில்லடா என்பது தமிழனென்று சொல்லடா தலை "கவிழ்ந்து" நில்லடா என்றாகிபோனது..!! இன்னும் ஏன் தாமதம் ?? வீதிக்கு வா தமிழா..!! உன் நாட்டை மீட்டு எடு..!!
Subscribe to:
Posts (Atom)