மாட்டின் மீது அக்கறை கொண்டாயே...!! நாட்டை தவிக்க விட்டு வேடிக்கை பார்க்கிறாயே....!!! எங்கே உன் தமிழ் உணர்வு ??!!
தமிழ் கலாச்சாரம் அழிந்துவிட கூடாது என்று வீதிக்கு வந்தாய்...!! இன்று தமிழே அழிகிறது !! எங்கு சென்றாய் ??
வெள்ளம் வந்தது ஓடோடி வந்தாய்..!! பேரிடர் வந்தது பெருகி வந்தாய் !! இனம் அழிந்தது, ஈடு கொடுக்காமல் காத்தெடுத்தாய்..!! இன்று உன் நாடே அழிகிறது, எப்போது வருவாய் ??
தமிழனென்று சொல்லடா தலை "நிமிர்ந்து" நில்லடா என்பது தமிழனென்று சொல்லடா தலை "கவிழ்ந்து" நில்லடா என்றாகிபோனது..!! இன்னும் ஏன் தாமதம் ?? வீதிக்கு வா தமிழா..!! உன் நாட்டை மீட்டு எடு..!!

No comments:
Post a Comment