Pages

Sunday, February 12, 2017

கனவு #15 - சொர்கம் எங்கே ??!!



நல்ல பையனா இருடா, அப்ப தான் கடவுள் உன்ன சொர்க்கதில் சேர்த்துபாரு...,
என்று என் நண்பன் சொல்ல..!!

சொர்க்கதில் என்ன கிடைக்கும் என்று கேட்டேன்..!!
பசி தீர்க்க அமிர்தம் கிடைக்கும், 
ஓடி விளையாட தேவதைகள்,
அன்பு பரிமாற ரிஷிகள், 
என்னை ஆனந்தமாய் பார்த்துக்கொள்ள தேவிகள்,
நான் கேட்பதை கொடுக்க கடவுள்...!!!
என்று கூறி என்னை ஒரு பார்வை பார்த்தான்..!!!!

இதை கேட்டதும் எனக்கு ஆனந்தம், 
அவனிடம் சிரித்து கொண்டே சொன்னேன்...!!!

நீ கூறிய வார்த்தைகள் உண்மையானால், 
இப்போதும் நீ சொர்க்கத்தில் தானே இருக்கிறாய்..!!!
தாய் உனக்கு ஊட்டிய பாலை விட அமிர்தம் பெரிதல்ல...!!!
நீ சோர்ந்தாலும், உன்னை தட்டி எழுப்பி உன்னுடன் விளையாட உன் தமையன், தங்கை இருக்கையில் தேவதைகள் எதற்கு...??
அன்பு பரிமாற அன்பர்களாய் நண்பர்கள் இருக்கையில் ரிஷிகள் எதற்கு...???
அவள் ஆனந்தம் பாராது, உன் ஆனந்தம் வேண்டி கண்ணீர் சிந்தும் தாய் இருக்கையில், தேவிகள் எதற்கு..???
கேட்கும் முன் இது தான் உன் தேவை என புரிந்து கொள்ளும் தந்தை இருக்கையில், கடவுள் எதற்கு...??

கடவுள் அமைத்த சொர்க்கத்தில் வாழ்கிறாய்...!!!
பொய்யாக ஒரு சொர்க்கத்தை உருவாக்கி உன் நொடிகளை வீனாக்கி விடாதே..!!!

...... 💗💗💗💗💗




No comments:

Post a Comment