Pages

Wednesday, February 1, 2017

கனவு #4 - என் தோட்டத்து நண்பன்...!!!!

என் தோட்டத்து நண்பன்...!!!!



தினமும் காலையில் தோட்டத்தில் பூக்கும் அவன், அவன் தோழியான தேனிக்காக காத்திருப்பான்..!!!
கதிரவன் தோன்றி, அவன் தோழி அவனை வட்டமிட..!!
அழகாய் மலர்வான்..!!
விளையாட்டாக ஒரு நாள் தேனியை போகவிடாமல் தடுத்து விட்டேன்....!!
கதிரவனும் உதித்தெழுந்தான், என் நண்பனும் அவன் தோழிக்காக பொறுமை காத்து மலராமல் இருந்துவிட்டான்...!!!
அவன் நட்பை கண்டு வியந்து அவனிடம் மன்னிப்பு கேட்டேன்...!!
மறுநாள் அவன் தேனியிடம் கண்ணீர் சிந்தியபடி மெல்லிய குரலில்,
அன்பு தோழியே...!!
என் தேனை உனக்கு மட்டும் தான் தருவேன், உனக்காக தான் தினமும் மலர்கிறேன்..!!
என்னை விட்டு வேறு பூவிடம் போய் விடாதே..!! என்றான்..
இந்த நட்பை கண்டு பெருமை கொண்டேன்..!!
நாட்கள் கழிந்தன..!!
அந்த இரவு, தேனி அழுதபடி என்னிடம் வந்தது, 
நான் சாக போகிறேன், நாளை பொழுது விடிந்தால் என் நண்பன் நான் இன்று வாடி விடுவான், அவனை வாட விடாதே என்று கூறி என் முன்னே இறந்து விட்டது...!!!
என்ன செய்வது என்று புரியாமல், தூக்கம் இன்றி தவித்தேன்...!!!
பொழுது விடிந்தால் தானே என் நண்பன் தேனிக்காக காத்திருப்பான்..!!!
கதிரவன் உதிக்கும் முன், நான் எழுந்து அவனை என் கைக்குள் வைத்து கொண்டேன்...!!!
கதிரவன் மறையும் வரை என் கைக்குள் இரவாக பார்த்து கொண்டேன்..!!!
இன்று வரை கதிரவன் தான் உதிக்க வில்லை என்று நினைத்து, ஒரு நாள் தன் தோழி வருவாள் என்று என்னி மலர்வதற்காக காத்திருக்கிறான்...!!!!

உங்கள்  கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்...!! :-)






4 comments: